பென்ஷன் திட்டத்தின் புதிய இலக்கு பென்ஷன் திட்டத்தின் புதிய இலக்கு ...  ஆயிரம் சந்தேகங்கள் :பிளாட்டினத்தில் ஏன்  முதலீடு செய்வதில்லை? ஆயிரம் சந்தேகங்கள் :பிளாட்டினத்தில் ஏன் முதலீடு செய்வதில்லை? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முதலீடு செய்வது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
19:21

சொந்த வீடு, ஓய்வு கால திட்டமிடல், வாகனம் போன்ற இலக்குகளுடன் குழந்தைகளின் எதிர்காலமும் பெற்றோரின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக அமைகிறது. குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமணத்தை மனதில் கொண்டு முதலீடு செய்வதும் அவசியமாகிறது.


அதிலும் குறிப்பாக உயர்கல்விக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் எதிர்கால கல்விக்கு சரியான வழியில் முதலீடு செய்வது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தைகள் எதிர்காலத்திற்கு முதலீடு செய்யும் போது வழக்கமாக பலரும் செய்யும் தவறுகளையும் தவிர்ப்பது அவசியம்.

பணவீக்கம்:


உயர்கல்விக்கான திட்டமிடும் போது, கல்வி செலவை கணக்கிட்டு செயல்படுவது அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர். ஆனால், கல்விக்கான செலவில் பணவீக்கத்தின் தாக்கத்தை கருத்தில் கொள்ள பெரும்பாலானோர் தவறிவிடுகின்றனர். இது போதுமான தொகை கையில் இருப்பதை பாதிக்கலாம்.


தாமதம் கூடாது:


பணவீக்கத்தை கருத்தில் கொள்ளாமல் இருப்பது முதல் தவறு என்றால், முதலீடு செய்வதை தாமதமாக்குவது இரண்டாவது பெரிய தவறாகிறது. தாமதமாக துவங்கும் போது முதலீட்டின் பலன் குறைவாக இருக்கும். ஆரம்பத்தில் இருந்து முதலீடு செய்தால் கூட்டு வட்டியின் ஆற்றலால் அதிக பலன் பெறலாம்.


பரவலாக்கம்:


முதலீட்டிற்கு தேர்வு செய்யும் வழிகளிலும் கவனம் தேவை. குறிப்பிட்ட ஒரு வகையான முதலீட்டை மட்டும் மேற்கொள்வது பலனை குறைக்கும். நீண்ட கால நோக்கில் நல்ல பலன் பெற வேண்டும் எனில் முதலீட்டில் பரவலாக்கம் தேவை. கடன் சார் முதலீட்டில் ஒரு பகுதியும், சமபங்கு முதலீட்டில் ஒரு பகுதியும் இருப்பது நல்லது.-


காப்பீடு பாதுகாப்பு:


குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முதலீடு செய்யும் போது, முதலீட்டிற்கு எதிர்பாராமல் ஏற்படக்கூடிய இடையூறுகளுக்கு எதிராக பாதுகாப்பு தேவை. மருத்துவ நெருக்கடி போன்றவை முதலீட்டை பாதிக்கலாம் என்பதால், போதுமான காப்பீடு பெற்றிருப்பதும் மிகவும் அவசியம்.


உறுதி தேவை:


அவசர தேவை ஏற்படும் போது, குழந்தைகளின் எதிர்கால நிதியில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்வதும் பலர் செய்யும் தவறாக அமைகிறது. பணத்தை பாதியில் விலக்கி கொள்வது பலனை பாதிக்கும். இந்த நிலையை தவிர்க்க அவசர கால நிதியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)