பதிவு செய்த நாள்
19 அக்2021
19:37
வேலை தருவதாக மோசடி
விமான சேவை நிறுவனமான ‘இண்டிகோ’ நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் கேட்கும் போலி நபர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, வேலை பெற்று தருவதாகவோ அல்லது பயிற்சி வழங்குவதாகவோ கூறி பணம் கேட்டால், தயங்காமல் காவல்துறையிடம் புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் முதல் கிளை
‘உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’ தன் செயல்பாடுகளை தமிழகத்தில் துவக்கி உள்ளது. இவ்வங்கி, சென்னை அசோக் நகரில்,தன்னுடைய முதல் கிளையை திறந்துள்ளது.இவ்வங்கி, 19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 202 மாவட்டங்களில், மொத்தம் 601 கிளைகளை கொண்டுள்ளது.
வாராக் கடன் அதிகரிக்கும்
நாட்டிலுள்ள வங்கிகளின் மொத்த வாராக் கடன்கள், நடப்பு நிதியாண்டில் 8 – 9 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக, கடன் தர நிர்ணய நிறுவனமான ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.இருப்பினும், கடன் மறுசீரமைப்பு திட்டங்கள், அவசரகால கடன் உத்தரவாத திட்டம் போன்றவற்றால், வாராக்கடன்கள் அதிகரிப்பது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என, கிரிசில் தெரிவித்துள்ளது.
மாத தவணை தள்ளுபடி
தனியார் துறையை சேர்ந்த ‘ஆக்சிஸ் பேங்க்’ பண்டிகை காலத்தை ஒட்டி, குறிப்பிட்ட சில வீட்டுக் கடன் திட்டங்களில், 12 மாதத் தவணையை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளது. மேலும், இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு பரிசீலனை கட்டணம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.
இரு மடங்கு அதிகம்
இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், கடந்த செப்டம்பர் காலாண்டில், 377 டீல்கள் வாயிலாக மொத்தம் 81 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது, இது இரு மடங்கு அதிகமாகும்.பெங்களூரு மற்றும் டில்லி தலைநகர பிராந்தியம் ஆகியவை, நாட்டின் முக்கிய ஸ்டார்ட் அப் நகரங்களாக தொடர்ந்து உள்ளன. மொத்த நிதி நடவடிக்கைகளில் இவற்றின் பங்கு 76-- -– 78 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|