பதிவு செய்த நாள்
19 அக்2021
19:39
புதுடில்லி:ஐ.ஆர்.சி.டி.சி., எனும், இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகத்தின் சந்தை மதிப்பு, நேற்று 1 லட்சம் கோடி ரூபாயை தொட்டது.
இதையடுத்து, 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய ஒன்பதாவது பொதுத்துறை நிறுவனமாக ஐ.ஆர்.சி.டி.சி., உயர்ந்துள்ளது.நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தின் இடையே, இந்நிறுவன பங்கின் விலை, மும்பை பங்குச்சந்தையில் 6,393 ரூபாய் என்ற இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது.
இதையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.1 லட்சம் கோடி ரூபாயை தொட்டது.இதற்கு முன்பாக, ‘எஸ்.பி.ஐ., கோல் இந்தியா, என்.எம்.டி.சி., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பவர் கிரிட் கார்ப்பரேஷன், எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ்.‘பாரத் பெட்ரோலியம், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள், 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிஉள்ளன.
இருப்பினும், நேற்று வர்த்தக இறுதியில், இந்நிறுவன பங்கின் விலை 5,363 ரூபாயாக சரிவை கண்டது. இதன் தொடர்ச்சியாக சந்தை மதிப்பும், 85 ஆயிரத்து, 808 ரூபாயாக குறைந்தது. ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், கடந்த 2019ம் ஆண்டு, அக்டோபர் 14ம் தேதியன்று தன்னுடைய பங்குகளை சந்தையில் பட்டியலிட்டது.
அப்போது ஒரு பங்கின் விலை 320 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து இதுவரை இப்பங்கின் விலை, கிட்டத்தட்ட 1,737 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 308 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|