பதிவு செய்த நாள்
19 அக்2021
19:42
புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், தங்க இ.டி.எப்., முதலீட்டு பிரிவில், 446 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.பண்டிகை காலத்தை ஒட்டி, வரும் மாதங்களிலும் முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான, ‘ஆம்பி’ தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்டில், தங்க இ.டி.எப்., முதலீட்டு பிரிவில் 24 கோடி ரூபாய் அளவுக்கே முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், செப்டம்பரில் 446 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.இதையடுத்து, இதுவரை இப்பிரிவில் செய்யப்பட்டுள்ள முதலீடு, 3,515 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கையும் 21.46 லட்சத்திலிருந்து, 24.60 லட்சமாக அதிகரித்துள்ளது.பண்டிகை காலத்தை ஒட்டிய தேவைகள் அதிகரித்ததன் தொடர்ச்சியாக, கூடவே தங்கத்தின் மீதான இத்தகைய முதலீடும் அதிகரித்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக, இ.டி.எப்., நிதிகள் கருதப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|