பதிவு செய்த நாள்
19 அக்2021
19:44
புதுடில்லி:நாட்டில் உள்ள முக்கியமான 8 நகரங்களில் வீடுகள் விற்பனை, கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 59 சதவீதம் அதிகரித்துள்ளதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான ‘பிராப்டைகர் டாட் காம்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து தெரிவித்துள்ளதாவது:கடந்த செப்டம்பர் காலாண்டில், நாட்டில் உள்ள முக்கியமான 8 நகரங்களில் வீடுகள் விற்பனை, கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 59 சதவீதம் அதிகரித்துள்ளது.மேலும், இதற்கு முந்தைய ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக, செப்டம்பர் காலாண்டு விற்பனை, கடந்த ஆண்டு 35 ஆயிரத்து, 132 வீடுகளாகவும்; கடந்த ஜூன் காலாண்டில் 15 ஆயிரத்து, 968 வீடுகளாகவும் இருந்தது. தற்போது செப்டம்பர் காலாண்டில் விற்பனை 55 ஆயிரத்து, 907 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வீடுகள் விற்பனை, செப்டம்பர் காலாண்டில் இரு மடங்கு அதிகரித்து உள்ளது. அகமதாபாதில் 64 சதவீதம் அதிகரித்துள்ளது. பெங்களூருவில் 36 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையில் 92 சதவீதம் அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், 45 லட்சம் ரூபாய்க்கு குறைவான விலை கொண்ட வீடுகள் விற்பனை, மொத்த விற்பனையில் 40 சதவீதமாக உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|