பதிவு செய்த நாள்
21 அக்2021
20:32
புதுடில்லி:நடப்பு பண்டிகை காலத்தில், ‘ஸ்மார்ட்போன்’ களின் விற்பனை, இதுவரை இல்லாத வகையில் 57 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்ப்பதாக, ஆராய்ச்சி நிறுவனமான ‘கவுன்டர்பாயின்ட்’ தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை இல்லாத வகையில் எளிய மாத தவணை திட்டங்கள் அதிகளவில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் விற்பனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:பண்டிகை காலத்தில், ஸ்மார்ட்போன் சில்லரை விற்பனையின் சராசரி விற்பனை விலை 14 சதவீதம் உயர்ந்து, கிட்டத்தட்ட 17,200 கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்டும்.நடுத்தர மற்றும் பிரீமியம் பிரிவுகளில் நுகர்வோர் தேவை அதிகரித்து, விற்பனையை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த நுகர்வோர் நம்பிக்கை, இந்த பண்டிகை காலத்தில் அதிகரித்துள்ளது. பலர் தங்களிடம் இதுவரை சேர்த்துள்ள பணத்தை கொண்டு, இந்த பண்டிகை காலத்தில் தங்கள் தேவைகளை நிறைவேற்ற திட்ட மிட்டுள்ளனர். இந்த போக்கின் காரணமாக, பலர் தங்களுடைய செல்போன்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புவர்.
மேலும், முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த பண்டிகை காலத்தில் எளிய தவணை திட்டங்கள் அதிகளவில் அறிமுகம் ஆகி உள்ளதால், விலையை பொருட்படுத்தாமல் வாங்குவர் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|