பதிவு செய்த நாள்
21 அக்2021
20:46
புதுடில்லி:உலகளவிலான எரிசக்தி துறை நிறுவனமான, பி.பி., இந்தியாவில், ஜியோ – பி.பி., எனும் பிராண்டில், அதன் முதல் பெட்ரோல் நிலையத்தை, மும்பை அருகில் துவக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் கூட்டு வைத்து, இந்தியாவில் பெட்ரோல் நிலையங்களை நடத்த உள்ளது, பி.பி., நிறுவனம்.இதற்காக இந்நிறுவனம், கடந்த 2019ல் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 1,400 பெட்ரோல் நிலையங்கள் மற்றும் 31 விமான எரிபொருள் நிலையங்கள் ஆகியவற்றில், 49 சதவீத பங்குகளை 7,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
‘ரிலையன்ஸ் பி.பி., மொபிலிட்டி’ எனும் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டு நிறுவனத்தின் கீழ், ஜியோ – பி.பி., எனும் பிராண்டு பெயரில், பெட்ரோல் சில்லரை விற்பனை வணிகம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|