பதிவு செய்த நாள்
21 அக்2021
20:48
புதுடில்லி:சீனாவின் இரண்டாவது மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘எவர்கிராண்டு’ தொடர்ந்து நிதி சிக்கல்களை சந்தித்து வருவதை அடுத்து, அது உலக சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
எவர்கிராண்டு நிறுவனம், தன்னுடைய நிதிச் சுமையை குறைக்கும் வகையில், அதன் சொத்து மேலாண்மை நிறுவனத்தை வேறொரு சிறிய நிறுவனத்துக்கு விற்க திட்டமிட்டு இருந்தது.ஆனால், இம்முயற்சி தோல்வியை தழுவியதாக எவர்கிராண்டு தெரிவித்ததை அடுத்து, உலக பங்குச் சந்தைகள் பல, நேற்று சரிவை சந்தித்தன.
பிரான்சின் சி.ஏ.சி., ஜெர்மனியின் டி.ஏ.எக்ஸ்., பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹாங் செங், ஜப்பானின் நிக்கி என பலவும் சரிவை சந்தித்தன.சீன அரசு, வாய்மொழி உத்தரவுகள்மற்றும் வீட்டுக் கடன்களில் தளர்வுகள் ஆகியவற்றின் வாயிலாக இந்நிறுவனத்தின் சரிவை தடுக்க முயற்சித்து வருகிறது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|