பதிவு செய்த நாள்
21 அக்2021
20:50
புதுடில்லி:‘ஆப்பிள்’ நிறுவனத்துக்கு, ஒப்பந்த அடிப்படையில் ‘ஸ்மார்ட்போன்’ களை தயாரித்து வழங்கி வரும், தைவானைச் சேர்ந்த ‘பாக்ஸ்கான்’ நிறுவனம், இந்தியாவில் மின்சார வாகன தொழிற்சாலையை அமைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.
அண்மையில் பாக்ஸ்கான் நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில், பிற நிறுவனங்களுக்கான மின்சார கார் தயாரிப்பில் இறங்க இருப்பதாக தெரிவித்து இருந்தது.இந்நிலையில், தற்போது இந்தியா, பிரேசில், ஐரோப்பா ஆகிய நாடுகளில், மின்சார கார்களை தயாரிக்க திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவரப்படி, உலகளவில் வாகனங்களுக்கான சந்தையில், இந்தியா ஐந்தாவது பெரிய சந்தையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, ‘டெஸ்லா’ நிறுவனம் துவங்கி, பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய சந்தையில் இறங்கும் முயற்சியில் உள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|