பதிவு செய்த நாள்
27 அக்2021
20:29
புதுடில்லி:இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின் நிகர லாபம் 65 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியாவை தலைமையிடமாக வைத்து இயங்கும் ‘மாருதி சுசூகி’ கார் தயாரிப்பு நிறுவனம், கடந்த காலாண்டில் நடந்த விற்பனை குறித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த 2022ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு, அதாவது கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, மாருதி சுசூகி நிறுவனத்திற்கு நிகர லாபமாக 475.3 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
எனினும், இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் கிடைத்த நிகர லாபத்தை விட இது 65.3 சதவீதம் குறைவாகும். 2021 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நிறுவனத்திற்கு நிகர லாபமாக, 1,371.6 கோடி ரூபாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
‘ஸ்டீல், அலுமினியம்’ மற்றும் இதர உலோகங்களின் விலைகள் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன. இருந்தும் அந்த உள்ளீட்டு செலவுகளால், விற்பனை பாதிக்கப் படாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் நிறுவனம் முன்னெடுத்தது. வேறு வழியின்றி உயர்த்தப்பட்ட கார்களின் விலைகளால், வாடிக்கையாளர்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|