முதலீட்டாளர்களுக்கு மத்திய அமைச்சர் மாண்டவியா அழைப்பு முதலீட்டாளர்களுக்கு மத்திய அமைச்சர் மாண்டவியா அழைப்பு ...  நடப்பு சீசனில் தங்க விற்பனை களைகட்டும்   ‘உலக தங்க கவுன்சில்’ அறிவிப்பு நடப்பு சீசனில் தங்க விற்பனை களைகட்டும் ‘உலக தங்க கவுன்சில்’ அறிவிப்பு ...
லாக் டவுனிற்குப் பிறகு சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள் : தாம்ஸ்குக் ஆய்வில் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
00:32

உள்நாட்டில் பயண செய்ய விரும்புவோரின் எண்ணிக்கை 290 சதவீதம் அதிகரித்திருப்பதாக இந்தியாவின் முன்னணி பயண சேவை நிறுவனமான தாமஸ் குக் (இந்தியா) நிறுவனம் தெரிவித்துள்ளது.

18 மாதகட்டுப்பாடுகளுக்குப்பின், மாநில எல்லைகள் திறக்கப்பட்டது மற்றும் தடுப்பூசி போடுதல் போன்ற நேர்மறையான நடவடிக்கைகள் காரணமாக மக்களிடையே பயணம் மேற்கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. இது ஊரடங்கு தளர்த்தப்பட்ட ஜூன் மாதத்தில் இருந்து மாதந்தோறும் அதிகரித்து தற்போது 68 சதவீதமாக உயர்ந்து உள்ளது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் பண்டிகை மற்றும் குளிர் காலம் மற்றும் எக்ஸ்போ 2020 துபாய் ஆகியவற்றின் காரணமாக தொற்று நோய்க்கு முந்தைய நிலையில் 55 சதவீதத்தில் இருந்து மீண்டு வருகிறது. இது உள்நாட்டு பயணத்தில் 290 சதவீதமாகவும் சர்வதேச பயணத்தை பொறுத்தவரை 60 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. துபாய் எக்ஸ்போ 2020 காரணமாக தற்போது மாலத்தீவு, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், துருக்கி, எகிப்து, ரஷ்யா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான இடங்களாக உள்ளன. திருமணம் மற்றும் தேனிலவு போன்றவற்றிற்கான பயணங்களும் அதிகரித்திருப்பதாக இந்நிறுவனம் கூறியுள்ளது.

தாமஸ் குக் இந்தியா நிறுவனம் தமிழகத்தில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தும் விதமாக சென்னை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் 11க்கும் மேற்பட்ட சொந்தமான பயண ஏற்பாட்டு மையங்கள் மற்றும் முகவர்களைக் கொண்டுள்ளது. பண்டிகை கால சிறப்பு சலுகை:தாமஸ் குக் இந்தியா நிறுவனம் ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்னும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் குறிப்பிட்ட இடங்களுக்கு தங்களுடன் கூட ஒருவரை அழைத்துச் செல்லலாம். ஆரம்ப கால சலுகையாக 60 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஐரோப்பாவின் குறிப்பிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம்; இந்தியாவில் சுற்றுலா செல்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தாஜ் கூப்பன் வழங்கப்படுகிறது.

இது குறித்து தாமஸ் குக் (இந்தியா) நிறுவனத்தின் பொழுதுபோக்கு பயணப் பிரிவின் துணைத் தலைவர் சந்தோஷ் கண்ணா கூறுகையில், நடப்பு ஆண்டின் 4வது காலாண்டில் சுற்றுலாவை துரிதப்படுத்தும் விதமாக பண்டிகை மற்றும் குளிர்கால மற்றும் குழு சுற்றுலாவுக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளோம், என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)