பதிவு செய்த நாள்
28 அக்2021
21:44
மும்பை:கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில், பங்குச் சந்தை கடுமையான சரிவை சந்தித்தது.
மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 1,159 புள்ளிகள் சரிவைக் கண்டது.ஆறு மாதங்களுக்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரிய ஒருநாள் சரிவு இதுவாகும். இதனால், பங்கு சந்தை முதலீட்டாளர்கள் 4.82 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தனர்.வங்கி துறை, நுகர்பொருள் துறை, எரிசக்தி துறை ஆகியவற்றில் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன.
மேலும் மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளும் சரிவைக் கண்டன.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நேற்று 1,159 புள்ளிகளும்; தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 353.70 புள்ளிகளும் சரிவைக் கண்டன.இதற்கு முன், கடந்த ஏப்ரல் 12ம் தேதியன்று சென்செக்ஸ் 1,708 புள்ளிகள் சரிந்தது. அதன் பின் இப்போது தான் மிக பெரிய சரிவை கண்டுஉள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் பிரிவில் ஐ.டி.சி., நிறுவனம் அதிக இழப்பை சந்தித்தது. இதன் பங்குகள் விலை 5.54 சதவீதம் சரிந்தது.சென்செக்சில் உள்ள 30 நிறுவனங்களில் ஆறு மட்டுமே லாபம் ஈட்டியுள்ளது. இண்டஸ்இண்ட் பேங்க் 2.94 சதவீதம் உயர்ந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|