பதிவு செய்த நாள்
30 அக்2021
19:39
புதுடில்லி:‘சபையர் புட்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, நவம்பர் 9ம் தேதியன்று துவங்குகிறது.பீட்சா ஹட், கே.எப்.சி., ஆகிய உணவகங்களை நடத்தி வரும் சபையர் புட்ஸ் இந்தியாவின் பங்கு வெளியீடு, நவம்பர் 9 தேதி துவங்கி, 11ம் தேதி முடிவடைகிறது.
இந்த பங்கு வெளியீட்டின் போது, முழுக்க முழுக்க நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. மொத்தம் 1.8 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,500- – 2,000 கோடி ரூபாய் நிதி திரட்ட, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இந்நிறுவனம் இந்தியா மற்றும் மாலத் தீவுகளில் 204 கே.எப்.சி., உணவகங்களை நடத்தி வருகிறது.
மேலும் இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளில் 231 பீட்சா ஹட் உணவகங்களையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது.இந்நிறுவனத்துக்கான பங்கு வெளியீட்டை ‘ஜே.எம்., பைனான்ஷியல், பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டீஸ்’ ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|