பதிவு செய்த நாள்
30 அக்2021
19:40
புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை கோரி உள்ளது மத்திய நிதியமைச்சகம்.
செபியின் தலைவராக தற்போது அஜய் தியாகி இருந்து வருகிறார். வரும் பிப்ரவரியுடன் இவரது ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன.ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அஜய் தியாகி, கடந்த 2017 மார்ச் மாதம் செபியின் தலைவராக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். அதன் பின், 6 மாத காலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில் மேலும் ஒன்றரை ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, அதிகபட்சம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரையில் பதவி வகிக்க, தகுந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பத்துக்கு டிசம்பர் 6ம் தேதி கடைசி தேதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|