பதிவு செய்த நாள்
02 நவ2021
20:22
புதுடில்லி:உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்குக்கு சொந்தமான, ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம், இந்தியாவில் ‘சாட்டிலைட் பிராட்பேண்டு’ சேவையை வழங்க ஏதுவாக, துணை நிறுவனம் ஒன்றை துவக்கி உள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் இந்திய பிரிவின் இயக்குனர் சஞ்சய் பர்கவா கூறியதாவது: சாட்டிலைட் பிராட்பேண்டு சேவைகளை வழங்கி வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்’ இந்தியாவில் அடுத்த ஆண்டு டிசம்பரில் இருந்து பிராட்பேண்டு சேவைகளை வழங்க உள்ளது.
அரசின் அனுமதியை பொறுத்து, இது இரண்டு லட்சம் ‘ஆக்டிவ் டெர்மினல்’களுடன் செயல்படும்.இந்தியாவில் இதற்காக ‘ஸ்டார்லிங்க் சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ எனும் பெயரில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனம், இம்மாதம் முதல் தேதியன்று துவக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இனி நாங்கள் உரிமம் கேட்டு விண்ணப்பிக்க முடியும்; வங்கி கணக்கு துவக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.ஏற்கனவே, சாட்டிலைட் பிராட்பேண்டு இணைப்புக்காக 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக, ஸ்டார்லிங்க் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|