வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  அக்டோபரில் சேவைகள் துறை வளர்ச்சி அக்டோபரில் சேவைகள் துறை வளர்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பண்டிகை கால விற்பனை வாகன முகவர்கள் வருத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2021
21:57

புதுடில்லி:நடப்பு பண்டிகை காலம் தான், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான காலமாகும் என, மோட்டார் வாகன முகவர்கள் கூட்டமைப்பான, எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.

இந்த கூட்டமைப்பானது, 15 ஆயிரம் முகவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பாகும். இந்த முகவர்களுக்கு நாடு முழுக்க கிட்டத்தட்ட 26 ஆயிரத்து, 500 ஷோரூம்கள் உள்ளன. ‘செமிகண்டக்டர் சிப்’ தட்டுப்பாடு காரணமாக, வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; கடந்த 10 ஆண்டுகளில் இந்த பண்டிகை காலம் தான் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, இவ்வமைப்பின் தலைவர் விக்னேஷ் குலாட்டி கூறியாதாவது:இந்திய வாகன சில்லரை விற்பனையில், இந்த பண்டிகை சீசன் தான் மிகவும் மோசமானதாக உள்ளது. ‘சிப்’ கிடைப்பதில் உள்ள தட்டுப்பாடு, பயணியர் வாகன பிரிவில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.குறிப்பாக எஸ்.யு.வி., காம்பாக்ட் எஸ்.யு.வி., மற்றும் ஆடம்பர கார் பிரிவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

நுழைவு நிலை வாகனங்களை பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் தங்கள் உடல்நலம் குறித்த தேவைகளுக்காக பணத்தை வைத்துக் கொள்ள விரும்புவதால், இப்பிரிவில் விற்பனை குறைந்துள்ளது.இரு சக்கர வாகன பிரிவிலும், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், விற்பனை இன்னும் ‘பிக் அப்’ ஆகவில்லை.

வர்த்தக வாகனங்களை பொறுத்தவரை, நிலைமை ஓரளவு பரவாயில்லை. தேவைகள் அதிகரித்துள்ளதை அடுத்து, பொருட்கள் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)