பதிவு செய்த நாள்
03 நவ2021
21:57
புதுடில்லி:நடப்பு பண்டிகை காலம் தான், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான காலமாகும் என, மோட்டார் வாகன முகவர்கள் கூட்டமைப்பான, எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.
இந்த கூட்டமைப்பானது, 15 ஆயிரம் முகவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பாகும். இந்த முகவர்களுக்கு நாடு முழுக்க கிட்டத்தட்ட 26 ஆயிரத்து, 500 ஷோரூம்கள் உள்ளன. ‘செமிகண்டக்டர் சிப்’ தட்டுப்பாடு காரணமாக, வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; கடந்த 10 ஆண்டுகளில் இந்த பண்டிகை காலம் தான் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, இவ்வமைப்பின் தலைவர் விக்னேஷ் குலாட்டி கூறியாதாவது:இந்திய வாகன சில்லரை விற்பனையில், இந்த பண்டிகை சீசன் தான் மிகவும் மோசமானதாக உள்ளது. ‘சிப்’ கிடைப்பதில் உள்ள தட்டுப்பாடு, பயணியர் வாகன பிரிவில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.குறிப்பாக எஸ்.யு.வி., காம்பாக்ட் எஸ்.யு.வி., மற்றும் ஆடம்பர கார் பிரிவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
நுழைவு நிலை வாகனங்களை பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் தங்கள் உடல்நலம் குறித்த தேவைகளுக்காக பணத்தை வைத்துக் கொள்ள விரும்புவதால், இப்பிரிவில் விற்பனை குறைந்துள்ளது.இரு சக்கர வாகன பிரிவிலும், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், விற்பனை இன்னும் ‘பிக் அப்’ ஆகவில்லை.
வர்த்தக வாகனங்களை பொறுத்தவரை, நிலைமை ஓரளவு பரவாயில்லை. தேவைகள் அதிகரித்துள்ளதை அடுத்து, பொருட்கள் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|