பதிவு செய்த நாள்
03 நவ2021
22:03
புதுடில்லி:‘லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 10ம் தேதியன்று துவங்க இருப்பதை அடுத்து, அதன் பங்குகளின் விலையை நிறுவனம் அறிவித்துள்ளது.
லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ் நிறுவனம், அதன் ஒரு பங்கின் விலை 190 – 197 ரூபாய் என நிர்ணயித்து அறிவித்துஉள்ளது.இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 10ம் தேதியன்று துவங்கி, 12ம் தேதியன்று முடிவடைய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 600 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின்போது, 474 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 126 கோடி ரூபாய்க்கு நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகளையும் இந்நிறுவனம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த பங்குவெளியீட்டின்போது, 75 சதவீத பங்குகள் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும்; 15 சதவீத பங்குகள் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்காக வும்; 10 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிறுவனம் தரவு, பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் தீர்வுகள் என, பல்வேறு வகைகளில் சேவைகளை வழங்கி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி என, பல நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|