பதிவு செய்த நாள்
03 நவ2021
22:20
சார்ஜிங் நிலையங்கள்
பொதுத்துறை பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனமான, ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்’ அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்ளாக, மின்சார வாகனங்களுக்கான 10 ஆயிரம் சார்ஜிங் நிலையங்களை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அடுத்த 12 மாதங்களுக்குள்ளாக 2 ஆயிரம் நிலையங்களையும், அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக மீதம் 8 ஆயிரம் நிலையங்களையும் அமைக்க இருப்பதாக, ஐ.ஓ.சி., தெரிவித்துள்ளது.
எஸ்.பி.ஐ., லாபம்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, ‘பாரத ஸ்டேட் வங்கி’யின் ஒருங்கிணைந்த நிகர லாபம், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 69 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 8,890 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது, 5,246 கோடி ரூபாயாக இருந்தது.
டெல்லிவரி ஐ.பி.ஓ.,
‘டெல்லிவரி’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது. இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 7,460 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பங்கு வெளியீட்டின்போது 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.
வேதாந்தாவுக்கு அனுமதி
வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘சேசா மைனிங்’ நிறுவனத்தின் நிர்வாக குழு, ‘தேசாய் சிமென்ட்’ நிறுவனத்தை கையகப்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. இந்த கையகப்படுத்தும் நடவடிக்கை, நிறுவனம் சிமென்ட் துறையிலும் இருப்பதற்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எவ்வளவு தொகைக்கு கையகப்படுத்தப்படுகிறது என்பதை தெரிவிக்கவில்லை.
எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு
இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு, அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் 22.50 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு வளர்ச்சி காணும் என, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியுள்ளார். மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களுடன் இந்தியா இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|