‘லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ்’  ‘லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ்’ ...  பணியமர்த்தல் நடவடிக்கை அக்டோபரில் அதிகரிப்பு பணியமர்த்தல் நடவடிக்கை அக்டோபரில் அதிகரிப்பு ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2021
22:20

சார்ஜிங் நிலையங்கள்

பொதுத்துறை பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனமான, ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்’ அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்ளாக, மின்சார வாகனங்களுக்கான 10 ஆயிரம் சார்ஜிங் நிலையங்களை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அடுத்த 12 மாதங்களுக்குள்ளாக 2 ஆயிரம் நிலையங்களையும், அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக மீதம் 8 ஆயிரம் நிலையங்களையும் அமைக்க இருப்பதாக, ஐ.ஓ.சி., தெரிவித்துள்ளது.

எஸ்.பி.ஐ., லாபம்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, ‘பாரத ஸ்டேட் வங்கி’யின் ஒருங்கிணைந்த நிகர லாபம், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 69 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 8,890 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது, 5,246 கோடி ரூபாயாக இருந்தது.

டெல்லிவரி ஐ.பி.ஓ.,

‘டெல்லிவரி’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது. இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 7,460 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பங்கு வெளியீட்டின்போது 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.

வேதாந்தாவுக்கு அனுமதி

வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘சேசா மைனிங்’ நிறுவனத்தின் நிர்வாக குழு, ‘தேசாய் சிமென்ட்’ நிறுவனத்தை கையகப்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. இந்த கையகப்படுத்தும் நடவடிக்கை, நிறுவனம் சிமென்ட் துறையிலும் இருப்பதற்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எவ்வளவு தொகைக்கு கையகப்படுத்தப்படுகிறது என்பதை தெரிவிக்கவில்லை.

எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு

இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு, அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் 22.50 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு வளர்ச்சி காணும் என, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியுள்ளார். மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களுடன் இந்தியா இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)