வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  வழக்குகளை திரும்ப பெறுகிறது ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம் வழக்குகளை திரும்ப பெறுகிறது ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம் ...
பணியமர்த்தல் நடவடிக்கை அக்டோபரில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2021
22:42

புதுடில்லி:கடந்த அக்டோபரில், பணியமர்த்தும் நடவடிக்கை 43 சதவீதம் அதிகரித்துள்ளது என, ‘நாக்குரி ஜாப்ஸ்பீக்’ நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து, அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தொழில்நுட்ப வல்லுனர் களுக்கான தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த அக்டோபரில் பணியமர்த்தல் நடவடிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 43 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பத்துறை நன்கு வளர்ச்சி அடைந்திருப்பதை அடுத்து, தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபரில், முந்தைய ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும்போது, இத்துறையானது 85 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

அரசின், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்திட்டம் மற்றும், 5ஜி சேவைகளுக்கான முயற்சிகள் ஆகியவை, தொலைதொடர்பு துறையில் அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில்லரை விற்பனை, விருந்தோம்பல், பயணம் ஆகிய துறைகளும், விடுமுறை காலத்தை ஒட்டி மீண்டும் சூடுபிடிக்க துவங்கி இருக்கிறது. இதனால் இத்துறைகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும் கல்வி, வங்கி, நிதி சேவைகள் ஆகிய துறைகளும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நல்ல வளர்ச்சியை கண்டுவருகிறது. ஒட்டுமொத்தத்தில் பணியமர்த்தும் நடவடிக்கை, கொரோனாவுக்கு முந்தைய கால நிலைக்கு, நடப்பு ஆண்டு அக்டோபரில் திரும்பி உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)