பணியமர்த்தல் நடவடிக்கை அக்டோபரில் அதிகரிப்பு பணியமர்த்தல் நடவடிக்கை அக்டோபரில் அதிகரிப்பு ... முட்டை விலை 465 காசாக நிர்ணயம் முட்டை விலை 465 காசாக நிர்ணயம் ...
வழக்குகளை திரும்ப பெறுகிறது ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2021
22:46

புதுடில்லி:முன் தேதியிட்ட வரி குறித்த சர்ச்சையை தீர்க்கும் வகையில், இந்திய அரசு சட்ட திருத்தம் கொண்டுவந்ததை அடுத்து, இந்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்களை கைப்பற்றுவதற்கான வழக்குகளை கைவிட ஒப்புக்கொள்வதாக, பிரிட்டனை சேர்ந்த ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், வழக்குகளை கைவிடுவதை அடுத்து, அது 7,900 கோடி ரூபாயை திரும்ப பெறும் என தெரிகிறது.கடந்த 2012ல், முன்தேதியிட்ட வரிச் சட்ட திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனையடுத்து, 2012ம் ஆண்டு மே 28க்கு முன்பே, அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அவற்றின் சொத்துக்களை விற்பனை செய்திருந்தாலும், மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதை எதிர்த்து, ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம், சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அங்கு, இந்நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது.அத்துடன் தங்களிடம் பிடித்தம் செய்த தொகையை திருப்பி வழங்காத பட்சத்தில், வெளிநாடுகளில் உள்ள இந்திய அரசாங்கத்துக்கான சொத்துக்களை பறிமுதல் செய்ய இருப்பதாக கூறி, அதற்கான முயற்சிகளிலும் இறங்கியது.

இந்நிலையில், இந்திய அரசு, முன்தேதியிட்ட வருமான வரி சட்டப்பிரிவை நீக்குவதாக அறிவித்தது. இந்த நடவடிக்கையினால், இதற்கு முன் நிறுவனங்களிடமிருந்து வசூல் செய்திருந்த தொகையை திருப்பி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கெய்ர்ன் எனர்ஜி, வோடபோன் போன்ற நிறுவனங்களிடம் வசூலித்த தொகை திருப்பி வழங்க படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட கெய்ர்ன் நிறுவனம், இந்திய அரசுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)