‘கேப்ரிகார்ன் எனர்ஜி’யாக  மாறும் ‘கெய்ர்ன் எனர்ஜி’ ‘கேப்ரிகார்ன் எனர்ஜி’யாக மாறும் ‘கெய்ர்ன் எனர்ஜி’ ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
அடுத்த வாரத்தில் ஐ.பி.ஓ., 3 நிறுவனங்கள் வருகின்றன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2021
19:32

புதுடில்லி:நிறுவனங்கள் ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது, அடுத்த வாரமும் தொடர்கிறது. முக்கியமான மூன்று நிறுவனங்கள், அடுத்த வாரத்தில் பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன.

‘பேடிஎம்’ நிறுவனத்தின் தாய் நிறுவனமான, ஒன்நைன்செவன் கம்யூனிகேஷன்ஸ்; பீட்சா ஹட், கே.எப்.சி., ஆகிய உணவகங்களுக்கான உரிமம் பெற்று நடத்தி வரும் ‘சபையர் புட்ஸ் மற்றும் லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன. இந்நிறுவனங்கள் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்ட உள்ளன.

இதற்கு முந்தைய வாரத்தில், ஐந்து நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்த நிலையில், அடுத்த கட்டமாக இந்த மூன்று நிறுவனங்கள் வருகின்றன.பேடிஎம் நிறுவனம் 8ம் தேதியும்; சபையர் புட்ஸ் 9ம் தேதியும்; லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ் 10ம் தேதியும் பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன.

நடப்பு ஆண்டில் இதுவரை 46 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்துள்ளன. இதன் வாயிலாக இந்நிறுவனங்கள் மொத்தம் 80 ஆயிரத்து, 102 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன.இந்த ஆண்டில் மட்டும், மொத்தம் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 15 நிறுவனங்கள், மொத்தம் 26 ஆயிரத்து, 611 கோடி ரூபாய் திரட்டி இருந்தன. இதற்கு முன்பாக கடந்த 2017ல், அதிகபட்ச அளவாக 67 ஆயிரத்து, 147 கோடி ரூபாயை, 36 நிறுவனங்கள் திரட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)