பதிவு செய்த நாள்
05 நவ2021
19:32
புதுடில்லி:நிறுவனங்கள் ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது, அடுத்த வாரமும் தொடர்கிறது. முக்கியமான மூன்று நிறுவனங்கள், அடுத்த வாரத்தில் பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன.
‘பேடிஎம்’ நிறுவனத்தின் தாய் நிறுவனமான, ஒன்நைன்செவன் கம்யூனிகேஷன்ஸ்; பீட்சா ஹட், கே.எப்.சி., ஆகிய உணவகங்களுக்கான உரிமம் பெற்று நடத்தி வரும் ‘சபையர் புட்ஸ் மற்றும் லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன. இந்நிறுவனங்கள் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்ட உள்ளன.
இதற்கு முந்தைய வாரத்தில், ஐந்து நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்த நிலையில், அடுத்த கட்டமாக இந்த மூன்று நிறுவனங்கள் வருகின்றன.பேடிஎம் நிறுவனம் 8ம் தேதியும்; சபையர் புட்ஸ் 9ம் தேதியும்; லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ் 10ம் தேதியும் பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன.
நடப்பு ஆண்டில் இதுவரை 46 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்துள்ளன. இதன் வாயிலாக இந்நிறுவனங்கள் மொத்தம் 80 ஆயிரத்து, 102 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன.இந்த ஆண்டில் மட்டும், மொத்தம் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் 15 நிறுவனங்கள், மொத்தம் 26 ஆயிரத்து, 611 கோடி ரூபாய் திரட்டி இருந்தன. இதற்கு முன்பாக கடந்த 2017ல், அதிகபட்ச அளவாக 67 ஆயிரத்து, 147 கோடி ரூபாயை, 36 நிறுவனங்கள் திரட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|