வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
இந்திய கடன் சந்தையை கலக்கும் புதிய வணிகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2021
20:32

புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக அழைக்கப்படும்,

‘பை நவ் பே லேட்டர்’. அதாவது, ‘இப்போது வாங்குங்கள்; பிறகு செலுத்துங்கள்’ எனும் வணிகம்.கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவை எதுவுமின்றி, பொருட்களை எளிதாக தவணை திட்டத்தில் வாங்குவதற்கு, இப்போது பலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர்.

குறிப்பாக, ‘ஆன்லைன்’ வாயிலாக பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களை இந்த திட்டம் மிகவும் ஈர்த்து வருகிறது.முன்பணம் எதுவும் செலுத்தாமல், உடனடியாக பொருட்களை வாங்க முடியும் என்பதாலும்; இக்கடனுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு, வட்டி எதுவும் கிடையாது என்பதாலும், இந்த திட்டத்துக்கு மிக வேகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது 25 ஆயிரத்து, 900 கோடி ரூபாய் சந்தையாக இருக்கும் இந்த பி.என்.பி.எல்., தொழில், 2026ல் 3.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சந்தையாக ஏற்றம் பெறும் என, ஆராய்ச்சி நிறுவனமான ‘ரெட்சீர்’ தெரிவித்து உள்ளது.மேலும் பி.என்.பி.எல்., பயனர்கள் எண்ணிக்கை, தற்போது 1 – 1.5 கோடியாக இருப்பது, 2026ல் 8 – 10 கோடியாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

பி.என்.பி.எல்., நிறுவனங்கள், தற்போது அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை கடனாக வழங்குகின்றன.இது கிரெடிட் கார்டுகள் அனுமதிக்கும் தொகையைவிட குறைவாக உள்ளது. எனவே, கிரெடிட் கார்டு சந்தையை உலுக்குவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கொரோனாவுக்கு பிறகு அதிகம் பேர் ஆன்லைன் வாயிலாக பொருட்களை வாங்க துவங்கி உள்ளனர். இதனையடுத்து, எளிதான கடன் வசதிக்கான தேவை அதிகரித்து வருவதால், இப்பிரிவில் இன்னும் நிறைய நிறுவனங்கள் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)