பதிவு செய்த நாள்
09 நவ2021
20:33
மும்பை:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 10.5 சதவீதமாக இருக்கும் என, உள்நாட்டு தர நிர்ணய நிறுவனமான ‘பிரிக்வொர்க் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், இதற்கு முன் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என்று கணித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது 10 – 10.5 சதவீதமாக இருக்கும் என திருத்தி அறிவித்து உள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் தெரிவித்து உள்ளதாவது:எதிர்பார்த்ததை விட வேகமான மீட்சியை, பொருளாதார வளர்ச்சிக்கான பல குறிகாட்டிகள் காட்டுகின்றன. எனவே, எங்களுடைய முந்தைய கணிப்பான 9 சதவீதம் என்பதை மாற்றி, 10 – 10.5 சதவீதம் என அறிவித்து உள்ளோம்.மேலும், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி, மைனஸ் 7.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலை வராத பட்சத்தில், பொருளாதாரம் தொடர்ந்து, வரும் காலாண்டுகளில் நல்ல வளர்ச்சி பெறும்.
இருப்பினும், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, தாது பொருட்கள் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பு, ‘செமிகண்டக்டர் சிப்’ தட்டுப்பாடு ஆகியவை வளர்ச்சியை பாதிக்கும் வகையில் இருக்கின்றன.இவ்வாறு இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|