பதிவு செய்த நாள்
10 நவ2021
21:54
புதுடில்லி:அழகு, ஆரோக்கியம், பேஷன் சம்பந்தபட்ட பொருட்களை, ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்துவரும் ‘நைக்கா’ நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து, அதன் நிறுவனரான பல்குனி நாயரின் சொத்து மதிப்பு 48 ஆயிரத்து, 100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நைக்கா பிராண்டின் தாய் நிறுவனமான ‘எப்.எஸ்.என். இ காமர்ஸ் வெஞ்சர்ஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்து, அதன் பங்குகள் நேற்று சந்தையில் பட்டியலிடப்பட்டன. இதையடுத்து இந்நிறுவனப் பங்குகள் விலை 96 சதவீதம் வரை அதிகரித்தது.
இதன் காரணமாக, பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கும் இந்நிறுவனத்தின் நிறுவனரான பல்குனி நாயரின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது.இதனையடுத்து, புளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின்படி, பல்குனி நாயர், இந்தியாவில் சுயமாக முன்னுக்கு வந்த பணக்கார பெண்களில் முதலிடத்தை பெற்றிருக்கிறார்.
பல்குனி நாயர், தன்னுடைய 50வது வயதில் கடந்த 2012ல் நைக்கா ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தை ஏற்படுத்தினார்.இதையடுத்து, இந்நிறுவனம் அழகு சம்பந்தமான பொருட்களின் சில்லரை விற்பனையில் முன்னணிக்கு வந்தது.பங்குகள் விலை நேற்று அதிகரித்ததை அடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ௧ லட்சம் கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|