பதிவு செய்த நாள்
11 நவ2021
20:46
புதுடில்லி:வங்கிசாரா நிதி நிறுவனமான, ‘பைவ் ஸ்டார் பைனான்ஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,752 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, முழுக்க முழுக்க நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளே விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைவ் ஸ்டார் பைனான்ஸ் நிறுவனத்தில், ‘டி.பி.ஜி., மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ், நார்வெஸ்ட் வெஞ்சர்ஸ், கே.கே.ஆர்., செக்வோயா’உள்ளிட்ட பல பிரபல நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.இந்நிறுவனம், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பான வணிக கடன்களை குறு நிறுவனங்களுக்கும், சுயதொழில் செய்வோருக்கும் வழங்கி வருகிறது.
இந்நிறுவனம், கடந்த 1994ம் ஆண்டு துவக்கப்பட்டது. முதலில் நுகர்வோர் கடன் மற்றும் வாகன கடன்களை வழங்கி வந்தது. 2005ல், தன் கவனத்தை சிறு வணிகங்கள் பக்கம் திருப்பி, செயல்பட்டு வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|