பதிவு செய்த நாள்
11 நவ2021
21:32
சக்திகாந்த தாஸ் வலியுறுத்தல்
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், மெய்நிகர் நாணயங்களை அனுமதிப்பதற்கு எதிரான தன்னுடைய கருத்தை, மீண்டும்வலியுறுத்தி தெரிவித்துள்ளார். மெய்நிகர் நாணயங்கள் மத்திய வங்கிகளால் கட்டுப்படுத்தப்படாததால், அவை எந்தவொரு நிதி அமைப்புக்கும் கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு விமான பயணியர்
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது, பண்டிகை காலம் ஆகியவை காரணமாக, உள்நாட்டு விமான பயணியர் போக்குவரத்து, அக்டோபர் மாதத்தில் 67 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 87 – 88 லட்சமாக உயர்ந்துள்ளது என ‘இக்ரா’ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
வருமான வரி தாக்கல்
இதுவரை 2.38 கோடி பேருக்கும்அதிகமானோர், கடந்த நிதியாண்டுக்கானதங்களுடைய வருமான வரி தாக்கலைசெய்துள்ளனர். இதில், 1.68 கோடி வருமான வரி தாக்கல்கள் பரிசீலனை செய்யப்பட்டுவிட்டதாகவும்; 64 லட்சம் தாக்கல்களுக்கு ‘ரீபண்டு’ வழங்கப் பட்டு உள்ளதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
‘மகிந்திரா’ மின்சார வாகனம்‘
மகிந்திரா அண்டு மகிந்திரா’ நிறுவனம், 2027ல், 16 மின்சார வாகன மாடல்களைஅறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகதெரிவித்துள்ளது. எஸ்.யு.வி., மற்றும் இலகுரக வர்த்தக வாகன பிரிவில் இந்த மின்சாரவாகனங்கள் அறிமுகம் செய்யப்படஇருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வங்கிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில், வங்கிகளின் எண்ணிக்கை 2015ல், ஒரு லட்சம் பேருக்கு 13.6 ஆக இருந்தது; 2020ல், 14.7 ஆக அதிகரித்துள்ளது.இது ஜெர்மனி, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய வற்றை விட ஒப்பீட்டளவில் அதிகமாகும்.மேலும், மொபைல் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையும் 1,000 பேருக்கு, 13 ஆயிரத்து, 615 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|