வர்த்தகம் » பொது
உலகளவில் செல்வ மதிப்பு: அமெரி்க்காவை விஞ்சிய சீனா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 நவ2021
20:41

புதுடில்லி:உலகத்தின் செல்வ மதிப்பு, கடந்த இருபது ஆண்டுகளில், மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. செல்வம் அதிகரித்துள்ள நாடுகளில், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.
ஆலோசனை நிறுவனமான, 'மெக்கின்சி'யின் ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப் பட்டுஉள்ளது.இந்நிறுவனம் உலகின் முன்னணி 10 நாடுகளின் வரவு செலவு கணக்கை ஆராய்ந்துள்ளது. உலகின் வருவாயில், 60 சதவீதம் இந்த 10 நாடுகளுடையதாகும்.இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2000 மாவது ஆண்டில், உலகின் நிகர மதிப்பு 11 ஆயிரத்து, 700 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த 2020ல், 38 ஆயிரத்து, 550 கோடி லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்த அதிகரிப்பில், சீனாவின் பங்கு, மூன்றில் ஒன்றாக உள்ளது. சீனாவின் நிகர மதிப்பு, கடந்த 2000 மாவது ஆண்டில் 525 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2020ல் இது 9,000 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
அமெரிக்காவின் செல்வ மதிப்பு, இருபது ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் நிகர மதிப்பு 2020ல் 6,750 லட்சம் கோடி ரூபாய் ஆக உள்ளது.உலகளாவிய நிகர மதிப்பில் 68 சதவீதம், ரியல் எஸ்டேட்டில் சேமிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு மெக்கின்சி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 16,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 16,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 16,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 16,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!