பதிவு செய்த நாள்
18 நவ2021
19:40
திருப்பூர்:‘‘ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற வர்த்தக இலக்கை, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை விரைவில் எட்டிப்பிடிக்கும்,’’ என, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் தெரிவித்தார்.
திருப்பூரை அடுத்த பழங்கரையில், 19வது ‘யானெக்ஸ்’ நுால் மற்றும் துணி கண்காட்சி நேற்று துவங்கியது.கண்காட்சி அரங்கை திறந்து வைத்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் பேசியதாவது:திருப்பூரின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை வர்த்தகம், ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாயை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை, 60 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்டியுள்ளது.
கொரோனாவால், இலக்கை அடைவதில் தாமதம் ஏற்படுகிறது.வீட்டிலிருந்து பணிபுரிவோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் ‘கேஷூவல் வியர்’ ஆடை தேவை அதிகரித்துள்ளது. திருப்பூரில் 99 சதவீதம், இவ்வகை ஆடை ரகங்களே தயாரிக்கப்படுகிறது.
எனவே, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை தான், இவ்வகை ஆர்டர்களை வசப் படுத்துவதில் முதல் பயனாளியாக மாறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|