பதிவு செய்த நாள்
18 நவ2021
19:50
மும்பை:ரிசர்வ் வங்கி, இந்தியாவில் ‘டிஜிட்டல் கரன்சி’யை, அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வெள்ளோட்டமிட திட்டமிட்டுள்ளதாக, உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி அல்லது ‘மெய்நிகர் நாணயங்கள்’ என்பது, அடிப்படையில் டிஜிட்டல் வடிவிலான ரூபாயாகும்.முன்னதாக, ரிசர்வ் வங்கியின் கவர்னர், டிஜிட்டல் கரன்சி டிசம்பரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும், ஆனால் இதற்கு காலக்கெடு எதுவும் வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் பேமென்ட் மற்றும் செட்டில்மென்ட் பிரிவின் தலைமை பொது மேலாளர் பி.வாசுதேவன், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் கூறுகையில், ‘‘தற்போது இதற்கான பணியில் உள்ளதாகவும், டிஜிட்டல் நாணயம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் மற்றும் நுணுக்கங்களை ஆராய்ந்து வருகிறோம். ‘‘மேலும், டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்வது என்பது அத்தனை எளிதானதல்ல; அவசரப்படத் தேவையில்லை,’’ என்றார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|