பதிவு செய்த நாள்
18 நவ2021
19:52
புதுடில்லி:‘டாடா சன்ஸ்’ நிறுவனம், ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை ஏலம் எடுத்த கையோடு, கைவசம் இருக்கும் விமான நிறுவனங்களுடன், ஏர் இந்தியாவையும் இணைத்து, பெரிய நிறுவனமாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது.
டாடா வசம் உள்ள மலிவு கட்டண விமான சேவை நிறுவனமான ‘ஏர் ஆசியா’வையும், ஏர் இந்தியாவின் பட்ஜெட் விமான சேவை வழங்கும் ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
டாடா வசம், ஏர் ஆசியா நிறுவனத்தின் 84 சதவீத பங்குகள் இருப்பதால், அதனுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வணிகத்தை இணைப்பதில் எந்த சிரமமும் இருக்காது.அதே சமயம், ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ உடன் சேர்ந்து துவக்கப்பட்ட ‘விஸ்தாரா’ நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் மட்டுமே இருப்பதால், விஸ்தாராவை, ஏர் இந்தியாவுடன் இணைப்பது குறித்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் பேச்சு நடைபெற்று வருகிறது.
இம்முயற்சிகள் வெற்றி பெறும்பட்சத்தில், ‘ஏர் ஆசியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா, ஏர் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து, மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|