பதிவு செய்த நாள்
18 நவ2021
19:59
புதுடில்லி:மத்திய அரசின் உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், வீடுகளுக்கான சந்தையில் 75 – 80 சதவீதம் அளவுக்கு கறுப்பு பண பரிவர்த்தனைகள் குறைந்துள்ளதாக, வீட்டு தரகு நிறுவனமான ‘அனராக்’ தெரிவித்து உள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த 2016ல், உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், வீடுகளுக்கான சந்தையில், கறுப்பு பணம் அல்லது ரொக்க பண பரிவர்த்தனை 75 – 80 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது. ஆனால், இதில் வீடுகள் மறுவிற்பனை சந்தை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
நாட்டிலுள்ள முக்கியமான 7 நகரங்களில் உள்ள வீடுகள் கட்டித் தரும் நிறுவனங்கள், 1,500க்கும் மேற்பட்ட விற்பனை ஏஜன்டுகள், பத்திரப்பதிவு தகவல்கள் வாயிலாக இது குறித்த விபரங்கள் திரட்டப்பட்டன.முன்புபோல இன்றி, வாடிக்கையாளர்கள் புதிய வீடுகளை வாங்கும் போது, அதற்கான பரிவர்த்தனைகள் மிகவும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இருப்பினும், இன்னும் சில சிறு நகரங்கள் உள்ளிட்டவற்றில் கறுப்பு பண பரிவர்த்தனைகள் சிறிய அளவில் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|