பதிவு செய்த நாள்
18 நவ2021
20:08
மும்பை:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி, ‘கூகுள்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உள்ளது.
110 கோடி ரூபாய்
எஸ்.ஐ.டி.பி.ஐ., எனும், ‘இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி’ குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 1 கோடி ரூபாய் வரை மானிய வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதற்காக, கூகுள் இந்தியா நிறுவனத்துடன் இணைந்துள்ளது.கூகுள் இந்தியா நிறுவனத்துடனான இந்த கூட்டின் வாயிலாக, எஸ்.ஐ.டி.பி.ஐ., கொரோனா பாதிப்புகளை சரிசெய்யும் வகையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 110 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறு நிறுவனங்களை பிரதானமான இலக்காக கொண்ட இத்திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபாய் வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு, 25 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கூடுதல் கவனம்
இந்த திட்டத்தின் கீழ்,பெண் தொழில்முனைவோரால் நடத்தப்படும் நிறுவனங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.அத்தகைய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியில், தகுந்த சலுகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|