வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை திருத்திய ‘இக்ரா’ நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை திருத்திய ‘இக்ரா’ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘டிஜிட்டல்’ கடன் நிறுவனங்கள் சாட்டை எடுக்கும் ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2021
20:40

மும்பை:‘கிரிப்டோகரன்சி’ எனும் மெய்நிகர் நாணயங்கள், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு சவாலாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி தொடர்ந்து தெரிவித்து வரும் நிலை யில், தற்போது, சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் செயலிகள் வாயிலாக, ‘டிஜிட்டல்’ கடன்களை வழங்கும் நிறுவனங்களை ஒடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
சிறிய அளவிலான கடன்களை, தற்போது போன் செயலி வாயிலாகவே பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இருப்பினும், அவற்றின் செயல்பாடுகள் குறித்து, பல்வேறு புகார்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் நலனை காக்கும் வகையில், செயலி வாயிலாக, சட்டத்துக்கு புறம்பாக டிஜிட்டல் கடன்களை வழங்கும் நிறுவனங்களை தடுக்கும் வகையில், தனி சட்டத்தை இயற்ற, ரிசர்வ் வங்கியின் பணிக்குழு பரிந்துரைத்துள்ளது. இணையதளங்கள் மற்றும் மொபைல் போன் செயலிகள் வாயிலாக டிஜிட்டல் கடன்கள் வழங்கப்படுவது குறித்து ஆராய, பணிக்குழு ஒன்றை, கடந்த ஜனவரி மாதத்தில் ரிசர்வ் வங்கி அமைத்தது.
இக்குழு, டிஜிட்டல் கடனுக்கான தனி சட்டத்தை இயற்ற பரிந்துரைத்துஉள்ளது. மேலும், டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் தொகையை வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களின் வங்கி கணக்கு வாயிலாக மட்டுமே சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளன.
மேலும், கடனை வசூலிப்பது குறித்த நடத்தை விதிகளை ஏற்படுத்தி, அதன்படி டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும், பணிக்குழுவின் ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.டிஜிட்டல் வாயிலாக வழங்கப்பட்டு வரும் கடன்களின் அளவு, வங்கிகள் நேரடியாக வழங்கி வரும் கடனுடன் ஒப்பிடும்போது, மிகவும் குறைவாகவே இருக்கிறது.வங்கிகள் வழங்கும் கடன் 53.08 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், டிஜிட்டல் கடன் 1.12 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)