பதிவு செய்த நாள்
19 நவ2021
20:48
புதுடில்லி:
டில்லியை சேர்ந்த ‘எலின் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 760 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில் 175 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; 585 கோடி ரூபாய்க்கு, நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளதாக செபிக்கு தெரிவித்துள்ளது.
திரட்டப்படும் நிதியை கொண்டு கடனை அடைக்கவும், ஆலைகளை மேம்படுத்த மற்றும் விரிவுபடுத்த தேவையான மூலதன செலவுகளுக்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மின்னணு தயாரிப்பு சேவை நிறுவனமான எலின் எலக்ட்ரானிக்ஸ், பல்வேறு பிராண்டுகளுக்கு தேவைப்படும் பொருட்களை, முழுமையாக தயாரித்து வழங்கி வருகிறது.
குறிப்பாக விளக்குகள், மின்விசிறி, சிறிய சமையலறை சாதனங்கள் பிரிவில் தயாரிப்புகளை வழங்கி வருகிறது.கடந்த நிதியாண்டில், இந்நிறுவனம் 34.86 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இது 27.49 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|