சிறுதொழில் வளர்ச்சி வங்கி ‘கூகுள்’ நிறுவனத்துடன் கூட்டு சிறுதொழில் வளர்ச்சி வங்கி ‘கூகுள்’ நிறுவனத்துடன் கூட்டு ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
'போர்டு எஸ்கேப்' உடன் தீபாவளி கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2021
13:25

தீபங்களின் திருவிழா தீபாவளி. கனடாவை இரண்டாவது தாயகமாக ஏற்றுக்கொண்ட இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தெற்காசிய மக்களுக்கு இந்த தீபாவளி பண்டிக்கை மிக முக்கியமானது. பல கலாச்சார மக்களுக்கும், மதத்தவர்களுக்கும் தீபாவளி என்பது குடும்பங்கள் ஒன்று கூடி உணவுகளுடன் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகையாகும்.

இந்நிலையில் போர்டு நிறுவனத்தின் எஸ்யுவி ரக காரான எஸ்கேப், தீபாவளியை கொண்டாடும் விதமாக குறும்படம் மாதிரியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இரண்டு ஆண்டுகளாக தனது தந்தையை பிரிந்து டொராண்டோவில் இருக்கும் மகள், தனது கணவர், குழந்தையுடன் காரில் தனியாக இருக்கும் தந்தையை பார்க்க செல்வதுடன், தீபாவளியை கொண்டாட செல்வது போன்று உணர்வுப்பூர்வமாக அமைத்துள்ளனர். வயதான காலத்தில் தனிமையில் இருப்பது, உறவுகளை காண அவர்கள் ஏங்கி தவிப்பது, அதேப்போல் தந்தையை காணும் ஏக்கத்திலும், மகிழ்ச்சியிலும் உள்ள மகளின் தவிப்பு ஆகியவற்றை இந்த வீடியோவில் உணர்வுப்பூர்வமாக காண்பித்துள்ளனர். இறுதியாக There's no escape like home என்ற வாசகத்துடன் வீடியோ முடிகிறது. அதன் உடன் போர்டு காரின் அம்சங்கள் பற்றியும் அந்த வீடியோவில் ஆங்காங்கே வருவது போன்று எடுத்துள்ளனர்.

இந்த வீடியோவை எத்தனிசிட்டி மேட்டர்ஸின் வாசீம் சாஹிக் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கி உள்ளனர். இந்த காட்சிகள் முழுக்க டொராண்டோவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்திய இசையமைப்பாளர் ஆதித்யா அசோக் பின்னணி இசை அமைத்துள்ளார். முழு வீடியோ இணையதளங்களிலும், சமூகவலைதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. 30 மற்றும் 15 நொடி வீடியோக்கள் தெற்கு ஆசிய தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோவை காண அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் : www.fordtodealers.ca


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)