பதிவு செய்த நாள்
20 நவ2021
19:42
வருமான வரி ரீபண்டு
கடந்த ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து, நவம்பர் 15ம் தேதி வரையிலான காலத்தில், ரீபண்டாக 1.19 லட்சம் கோடி ரூபாயை வழங்கி இருப்பதாக, வருமான வரி துறை தெரிவித்துள்ளது.இந்த தொகை, வருமான வரி கணக்கை தாக்கல் செய்த, கிட்டத்தட்ட 1.02 கோடி பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், வருமான வரி துறையினர் அறிவித்துள்ளனர்.
கனிம உற்பத்தி குறியீடு
கடந்த செப்டம்பரில், சுரங்கம் மற்றும் குவாரிகள் துறையின் கனிம உற்பத்தி குறியீடு 95.1 ஆக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 22.3 சதவீதம் அதிகமாகும்.
இருப்பினும், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், முந்தைய ஆண்டைவிட 15.2 சதவீதம் குறைந்துள்ளதாக, சுரங்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.டி.சி., வணிகம் பிரிப்பு
சிகரெட் தயாரிப்பிலிருந்து, ஓட்டல்கள் வரை நடத்தி வரும் ஐ.டி.சி., நிறுவனம், அதன் மென்பொருள் வணிகத்தை தனியாக பிரிக்க திட்டமிட்டுள்ளது.கிட்டத்தட்ட 20 – 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மென்பொருள் வணிகத்தை தனியாக பிரிப்பது சம்பந்தமான திட்டத்தை, ஐ.டி.சி., நிறுவனத்தின் நிர்வாக குழு விரைவில் பரிசீலிக்க உள்ளது.
வாகன தகர்ப்பு மையங்கள்
‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில், வாகன தகர்ப்பு மையங்களை அமைத்து, செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்நிறுவனம், வாகன தகர்ப்பு மையங்களை நாடெங்கும் ‘பிரான்ச்சைஸ்’ முறையில் மற்றவர்களுக்கு உரிமங்களை வழங்கி, வணிகத்தை துவக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
அன்னிய செலாவணி இருப்பு
நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, இம்மாதம் 12ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 5, 646 கோடி ரூபாய் குறைந்து, 47 ஆயிரத்து 368 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.தங்கத்தின் இருப்பு, 10 ஆயிரத்து 804 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து, 2.98 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|