பதிவு செய்த நாள்
20 நவ2021
19:50
சென்னை:சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழில் கூட்டமைப்பின், ‘கனெக்ட் 2021 மாநாடு’ என்ற, தகவல் மற்றும் தகவல் தொடர்பு,தொழில்நுட்பம் சார்ந்த, சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி,சென்னையில் வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது.
இதுகுறித்து, சி.ஐ.ஐ., தமிழக தலைவர் சந்திரகுமார், சி.ஐ.ஐ., கனெக்ட் 2021 தலைவர் ஜோஷ் பவுல்கர் இணைந்து, அளித்த பேட்டி:தொழில் துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள பல்வேறு தகவல்களை புரிந்து கொள்வதற்கும், டிஜிட்டல் துறையில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் போன்றவை குறித்து ஆலோசிக்கவும்,சி.ஐ.ஐ., யின் முக்கிய நிகழ்வாக, கனெக்ட் மாநாடு திகழ்கிறது.
இதுவரை நடந்துள்ள கனெக்ட் மாநாடுகளால்,தமிழகத்தில் ஐ.டி.காரிடார், சிறப்பு தொழில் நுட்ப பூங்காக்கள், விண்வெளி தொழில் பூங்காவில் புதிய மேம்பாடு போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதன், 20வது மாநாடு, சென்னை ஐ.டி.சி., கிராண்ட் ஓட்டலில் வரும் 26ம், 27ல் நடக்கிறது.
தமிழக அரசு, மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு துறை, ‘சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்’ ஆகியவற்றுடன் இணைந்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது.மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, உரையாற்றுகிறார். தமிழக அரசின் தொழில், மக்கள் நல்வாழ்வு, தகவல் தொழில்நுட்பம், நிதி, ஊரக தொழில் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இரண்டு நாள் நடக்கும் மாநாட்டில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள், எலக்ட்ரானிக்ஸ், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்கள் தொடர்பான அமர்வுகள் நடக்கும்.
‘தமிழகத்தை வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் மையமாக மாற்றுதல்’ என்ற தலைப்பில் சிறப்பு அமர்வு நடக்க உள்ளது.உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த 130 வல்லுனர்கள் பேச உள்ளனர். தகவல் தொழில்நுட்ப துறையில், இந்தியா, குறிப்பாக, தமிழகத்தின் விரைவான வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, பிரத்யேக அமர்வுகளும், குழு விவாதங்களும் நடக்க உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|