பதிவு செய்த நாள்
20 நவ2021
19:52
மும்பை:போக்குவரத்து மற்றும் மூலப் பொருட்கள் விலை அதிகரிப்பால், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், இந்திய நிறுவனங்களின் லாபங்கள் பாதிக்கப்படக் கூடும் என, ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனாவிலிருந்து பொருளாதார செயல்பாடுகள் வேகமாக மீட்சி கண்டு வருகின்றன. நிதி நிலைமைகள், தேவைகள் அதிகரிப்பு காரணமாகவும், பொருளாதார மீட்சி வேகம் பிடித்து வருகிறது.இதையடுத்து, இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.
இருப்பினும், போக்குவரத்து மற்றும் மூலப்பொருட்கள் விலை அதிகரித்து வருவதை அடுத்து, நடப்பு நிதியாண்டின் அரையாண்டில், இவற்றை பயன்படுத்தும் நிறுவனங்களின் லாபங்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என, ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.
மேலும், அதிகரித்து வரும் மூலப் பொருட்களின் விலை உயர்வால், குடும்பங்களின் தேவை குறையும் வாய்ப்பும் இரண்டாவது அரையாண்டில் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இந்தியா ரேட்டிங்ஸ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
போக்குவரத்துக்கான செலவுகள் அதிகரித்து, வினியோக தரப்பில் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், அது உலகளவிலான பொருளாதார மீட்சியையும் சேர்ந்தே பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|