பதிவு செய்த நாள்
21 நவ2021
19:20
கடன் பெறுபவர்களில் வழக்கமான முறையை விட ஆன்லைனில் கடன் பெறும் டிஜிட்டல் வசதியை நாடுவது அதிகரித்திருப்பது மற்றும் இளம் தலைமுறையினர் மத்தியில் இது அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா தொற்று இரண்டாம் அலைக்கு பின், கடன் பெறும் போக்கு அதிகரித்திருப்பது, மீண்டும் இயல்பு நிலை திரும்பத் துவங்குவதற்கான அறிகுறியாக அமைந்திருப்பதாக ஹோம் கிரெடிட் இந்தியா நிதி நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 40 சதவீதத்தினர் டிஜிட்டல் முறையில் கடன் பெறுவதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் 15 சதவீதத்தினரே வழக்கமான முறையை விட டிஜிட்டல் கடன் வசதியை நாடினர். தொழில்நுட்பம் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தாலும், அரட்டை மென்பொருள் வசதி மற்றும் இளம் தலைமுறையின் விருப்பம் ஆகியவையும் இந்த போக்கிற்கு வலு சேர்த்துள்ளன.
வீட்டு செலவுகளுக்காக கடன் வாங்குவது குறைந்திருப்பது, வாழ்வியல் தேவைக்கான கடன் வசதி அதிகரித்திருப்பதை உணர்த்துவதாகவும், பொருளாதார மீட்சிக்கான அறிகுறியாக இது கருதப்படுகிறது. வர்த்தக கடன் மற்றும் சிறு கடன் எனப்படும் நுகர்வோர் கடனும் அதிகரித்துள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|