அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு  49.35 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு 49.35 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு ...  ஆயிரம் சந்தேகங்கள்: ‘ஆர்.பி.ஐ., ரீடெயில் டைரக்ட்’  சாதாரணர்களுக்கு என்ன பலன்? ஆயிரம் சந்தேகங்கள்: ‘ஆர்.பி.ஐ., ரீடெயில் டைரக்ட்’ சாதாரணர்களுக்கு என்ன ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வாகன கடன் தவணை காலத்தை தீர்மானிப்பது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2021
19:24

சொந்த வீடு போலவே, சொந்தமாக கார் வாங்கவும் கடன் வசதியை பலரும் நாடுகின்றனர். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகன கடன் வசதியை அளிக்கின்றன. வாகன கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, காருக்கான பட்ஜெட், வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிசீலிப்பது போலவே, கடன் தொகையை செலுத்த குறுகிய தவணை காலத்தை நாடுகிறோமா அல்லது நீண்ட தவணை காலத்தை நாடுகிறோமா என்பதை தீர்மானிக்க வேண்டும். இதன் முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம்.

தவணை குறைவு:

பொதுவாக கார் கடனை அடைக்க வங்கிகள் ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை நீண்ட கால வசதியை அளிக்கின்றன. நீண்ட காலத்தை தேர்வு செய்யும் போது, மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை குறைவாக இருக்கும் என்பது சாதகமான அம்சமாகும்.

சுமை அதிகம்:

அதே நேரத்தில் ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை குறைந்த கால வசதியை நாடினால், மாதத்தவணை அதிகம் செலுத்த வேண்டும். ஆனால், கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கும் என்பதோடு, குறைந்த கால அவகாசத்தில் கடனை அடைத்து விடலாம் என்பதும் சாதகம்.

ஒப்பீடு தேவை:

குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன் வாய்ப்பை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 10 லட்சம் ரூபாய்க்கு, 8.5 சதவீதத்தில் கடன் பெற்றால், நான்கு ஆண்டு காலத்தில் 1.83 லட்சம் அளவில் வட்டி செலுத்த வேண்டும் எனில், எட்டு ஆண்டு காலத்திற்கு 3.81 லட்சம் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இது இரு மடங்காகும்.

அதிக வட்டி:

பொதுவாக கடனை அடைக்க கூடுதல் காலம் தேவைப்படுபவர்கள் நீண்ட காலத்தை நாடலாம். இதனால் மாதாந்திர சுமை குறைவாக இருந்தாலும், மொத்த சுமை அதிகம். மேலும், நீண்ட கால கடனுக்கு வங்கியின் கடன் விகிதமும் சற்று கூடுதலாகவே இருக்கும்.

திட்டமிடல் தேவை:

பொதுவாக ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் என்பது கார்களின் சராசரி பயன்பாட்டு காலமாக அமைகிறது. அதன் பின் காரை மாற்ற விரும்பினால், கடன் தவணை ஒரு சிக்கலாக அமையும். எனவே, கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் இந்த அம்சங்களை மனதில் கொண்டு அதற்கேற்ப திட்டமிடுவது பலன் அளிக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)