பதிவு செய்த நாள்
23 நவ2021
16:09
சென்னை : மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களுக்காக டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம் அடுத்த நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் ரூ.1,200 கோடி முதலீடு செய்யும் என அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் தொழில் துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு” என்ற முதலீட்டாளர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.35 ஆயிரம் கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் டி.வி.எஸ்., நிறுவனத்தின் ரூ.1,200 கோடி முதலீடும் ஒன்று. மின்சார வாகன உற்பத்திக்காக இந்த முதலீட்டை அவர்கள் செய்ய இருக்கிறார்கள்.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த முதலீடு மின்சார வாகன உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது மற்றும் புதிய தயாரிப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்திக்காக செய்யப்படுகிறது. மின்சார பிராண்ட் மூலம் டி.வி.எஸ்., டிஜிட்டல் யுக நிறுவனமாக தன்னை மாற்றிக் கொள்கிறது. மின்சார வாகனங்கள், பசுமை எரிபொருள் போன்றவற்றில் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.
மாநிலத்தின் மனித வளம், உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த வணிகச் சூழல் ஆகிய திறன் மீது உறுதியான நம்பிக்கையுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் டி.வி.எஸ்., நிறுவனத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களும் பயனடையும். என கூறியுள்ளனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|