ஹோம்ஸ்டைல் இந்திய உணவுகளை வழங்கும் குயிக்லிஹோம்ஸ்டைல் இந்திய உணவுகளை வழங்கும் குயிக்லி ...  வளர்ச்சி 9.1 சதவீதம் ‘கோல்டுமேன் சாக்ஸ்’ கணிப்பு வளர்ச்சி 9.1 சதவீதம் ‘கோல்டுமேன் சாக்ஸ்’ கணிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மின்சார வாகன தயாரிப்பு : டி.வி.எஸ்., தமிழகத்தில் ரூ.1,200 கோடி முதலீடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2021
16:09

சென்னை : மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களுக்காக டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம் அடுத்த நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் ரூ.1,200 கோடி முதலீடு செய்யும் என அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் தொழில் துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு” என்ற முதலீட்டாளர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.35 ஆயிரம் கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் டி.வி.எஸ்., நிறுவனத்தின் ரூ.1,200 கோடி முதலீடும் ஒன்று. மின்சார வாகன உற்பத்திக்காக இந்த முதலீட்டை அவர்கள் செய்ய இருக்கிறார்கள்.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த முதலீடு மின்சார வாகன உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது மற்றும் புதிய தயாரிப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்திக்காக செய்யப்படுகிறது. மின்சார பிராண்ட் மூலம் டி.வி.எஸ்., டிஜிட்டல் யுக நிறுவனமாக தன்னை மாற்றிக் கொள்கிறது. மின்சார வாகனங்கள், பசுமை எரிபொருள் போன்றவற்றில் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.

மாநிலத்தின் மனித வளம், உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த வணிகச் சூழல் ஆகிய திறன் மீது உறுதியான நம்பிக்கையுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் டி.வி.எஸ்., நிறுவனத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களும் பயனடையும். என கூறியுள்ளனர்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)