பதிவு செய்த நாள்
23 நவ2021
23:39
புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த ஆண்டில் 9.1 சதவீதமாக இருக்கும் என, உலகளாவிய தரகு நிறுவனமான ‘கோல்டுமேன் சாக்ஸ்’ தெரிவித்துள்ளது.
வரும் 2022ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9.1 சதவீதமாக இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் 8 சதவீதமாக இருக்கும் என்றும், இந்நிறுவனம் தன் கணிப்பை வெளியிட்டுள்ளது.நாட்டின் இந்த வளர்ச்சிக்கு, அதிகரித்து வரும் நுகர்வு முக்கியமான காரணமாக அமையும் என்றும், கோல்டுமேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதன் காரணமாக, நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்துள்ளது.மேலும், தடுப்பூசிகள் போடுவதும் அதிகரித்து வருகிறது. அத்துடன், அரசின் மூலதன செலவுகளும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வளர்ச்சி அதிகரிக்கும் என கருதலாம்.
இருப்பினும், மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக, தயாரிப்புகளின் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி விலை அதிகரிக்கும்பட்சத்தில், நுகர்வு குறையவும் வாய்ப்பிருக்கிறது. இது வளர்ச்சிக்கு ஒரு சவாலான விஷயமாக இருக்கும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|