பதிவு செய்த நாள்
24 நவ2021
00:01
புதுடில்லி:‘பார்தி ஏர்டெல்’ நிறுவனம், அதன் ‘பிரீபெய்டு’ சேவைக்கான கட்டணத்தை 20 – 25 சதவீதம் உயர்த்தி அறிவித்த நிலையில், ‘வோடபோன் ஐடியா’ நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம், அதன் மொபல் டேட்டா மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை, 20 – 25 சதவீதம் உயர்த்த உள்ளதாக அறிவித்து உள்ளது. இந்த கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் 28 நாட்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம், தற்போது 79 ரூபாய். இது, 99 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
‘அன்லிமிடெட்’ அழைப்புகள் குறித்த திட்டங்களில், 20 – 23 சதவீதம் அளவுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.வரிசையாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்படுவதை அடுத்து, இந்தியாவில் மிகக் குறைவான தொலைபேசி கட்டணத்துக்கான காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்றே கருதத் தோன்றுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|