பதிவு செய்த நாள்
24 நவ2021
00:02
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, இம்மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 18.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த மதிப்பீட்டு காலத்தில் மட்டும், கிட்டத்தட்ட 1.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.பெட்ரோலிய பொருட்கள், பொறியியல் பொருட்கள், ரசாயனம், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகிய துறைகளில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டதை அடுத்து, நாட்டின் ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது.
மேலும், இக்காலகட்டத்தில் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இறக்குமதி 45.34 சதவீதம் அதிகரித்து, 2.41 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்வைக் கண்டுள்ளது.ஏற்றுமதியை பொறுத்தவரை, கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், 17.52 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், கிட்டத்தட்ட 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|