பதிவு செய்த நாள்
24 நவ2021
19:38
எச்.டி.எப்.சி., பேங்க் கணிப்பு
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு நிதியாண்டில் 9.4 சதவீதமாக இருக்கும் என்றும்; அடுத்த நிதியாண்டில் 7.5 சதவீதமாக இருக்கும் என்றும், எச்.டி.எப்.சி., பேங்க் அறிக்கை தெரிவித்துள்ளது.மேலும், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என்றும் இவ்வங்கி கணித்து அறிவித்துள்ளது.
மின் வாகன விற்பனை
கடந்த அக்டோபர் முதல் தேதியிலிருந்து, நவம்பர் 15ம் தேதி வரையிலான பண்டிகை காலத்தில், 24 ஆயிரம் மின் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, ‘ஹீரோ எலக்ட்ரிக்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலத்தில், மொத்தம் 11 ஆயிரத்து, 339 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும், இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்கி பங்குகள் விலை
மத்திய அரசு அடுத்தகட்டமாக, ‘இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்’ மற்றும் ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’ஆகியவற்றை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளதை அடுத்து, இந்நிறுவன பங்குகள் விலை நேற்று உயர்ந்தன.இவ்விரண்டு வங்கி பங்குகளின் விலையும், நேற்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில், 20 சதவீதம் வரை உயர்வைக் கண்டன.
விலையை உயர்த்திய ‘பார்லே’
உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘பார்லே புராடெக்ட்ஸ்’, அதன் பிஸ்கெட்டுகளின் விலையை, 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. சர்க்கரை, எண்ணெய், கோதுமை ஆகியவற்றின் விலை உயர்வை அடுத்து, இந்நிறுவனம், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு மாம்பழம் ஏற்றுமதி
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படாத நிலையில், விரைவில் ஏற்றுமதி செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சில ஏஜன்சிகளின் சோதனை சான்றிதழ்களை, அமெரிக்கா விரைவில் ஏற்கத் துவங்கும் என, அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|