பதிவு செய்த நாள்
24 நவ2021
19:49
புதுடில்லி:‘ஸ்டார் ஹெல்த் அண்டு அலய்டு இன்சூரன்ஸ்’ நிறுவனம், இம்மாதம் 30ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.
இதையடுத்து, ஒரு பங்கின் விலையை 870 – 900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்டார் ஹெல்த் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 7,249 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான பங்கு வெளியீடு, இம்மாதம் 30ம் தேதியன்று துவங்கி, டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இந்த பங்கு வெளியீட்டின் போது 2,000 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 5.8 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் பங்கு வெளியீட்டின்போது, 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள், நிறுவனத்தின் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது.
திரட்டப்படும் தொகையை கொண்டு, வலுவான மூலதன தளத்தை ஏற்படுத்திக் கொள்ள நிறுவனம் விரும்புகிறது.ஸ்டார் ஹெல்த் நிறுவனம், நாட்டில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். பங்குச் சந்தை முதலீட்டு நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உள்ளிட்ட பலர், இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|