வெள்ளி இ.டி.எப்., திட்டம் ‘செபி’ விதிமுறைகள் வெளியீடு வெள்ளி இ.டி.எப்., திட்டம் ‘செபி’ விதிமுறைகள் வெளியீடு ...  மாநிலங்களின் மூலதன செலவு பின்தங்கியது தமிழக அரசு மாநிலங்களின் மூலதன செலவு பின்தங்கியது தமிழக அரசு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி - சென்செக்ஸ் 1657.94 புள்ளிகள் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2021
12:10

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(நவ., 26) கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டன. புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மீதான அச்சம் மற்றும் முன்னணி நிறுவன பங்குகள் பெருமளவில் சரிந்ததால் இன்றைய வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது. தொடர்ந்து சரிந்து கொண்டே போன பங்குச்சந்தைகள் காலை 11 மணியளவில் 1400 புள்ளிகள் சரிவை சந்தித்தன பிறகு 11.30 மணியளவில் 1200 புள்ளிகள் சரிவு என்ற நிலையில் வர்த்தகமானது. காலை 11.45 மணியளவில் சென்செக்ஸ் 1111.62 புள்ளிகள் சரிந்து 57,683.47ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 335 புள்ளிகள் சரிந்து 17,200 ஆகவும் வர்த்தகமாகின.தொடர்ந்து சரிவிலேயே இருந்த பங்குசந்தை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1657.94 பு்ள்ளிகள்சரிந்து  57105.15 ஆகவும் , நிப்டி 509.8 பு்ளிகள் சரிந்து 17026.45 ஆக  நிறைவடைந்தது.

சரிவுக்கான காரணம் என்ன?
கொரோனா பல நாடுகளில் கட்டுக்குள் வந்தாலும் இன்னும் முழுமையாக தீரவில்லை. இப்போது தென் ஆப்ரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா நோய் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டித்தும் வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது. மேலும் ஆசிய பங்குச்சந்தைகளும் சரிவுடன் இருப்பதால் அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்கின்றன. இதனால் இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்துள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)