பதிவு செய்த நாள்
26 நவ2021
12:10
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(நவ., 26) கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டன. புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மீதான அச்சம் மற்றும் முன்னணி நிறுவன பங்குகள் பெருமளவில் சரிந்ததால் இன்றைய வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது. தொடர்ந்து சரிந்து கொண்டே போன பங்குச்சந்தைகள் காலை 11 மணியளவில் 1400 புள்ளிகள் சரிவை சந்தித்தன பிறகு 11.30 மணியளவில் 1200 புள்ளிகள் சரிவு என்ற நிலையில் வர்த்தகமானது. காலை 11.45 மணியளவில் சென்செக்ஸ் 1111.62 புள்ளிகள் சரிந்து 57,683.47ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 335 புள்ளிகள் சரிந்து 17,200 ஆகவும் வர்த்தகமாகின.தொடர்ந்து சரிவிலேயே இருந்த பங்குசந்தை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1657.94 பு்ள்ளிகள்சரிந்து 57105.15 ஆகவும் , நிப்டி 509.8 பு்ளிகள் சரிந்து 17026.45 ஆக நிறைவடைந்தது.
சரிவுக்கான காரணம் என்ன?
கொரோனா பல நாடுகளில் கட்டுக்குள் வந்தாலும் இன்னும் முழுமையாக தீரவில்லை. இப்போது தென் ஆப்ரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா நோய் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டித்தும் வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது. மேலும் ஆசிய பங்குச்சந்தைகளும் சரிவுடன் இருப்பதால் அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்கின்றன. இதனால் இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|