பதிவு செய்த நாள்
27 நவ2021
20:41
புதுடில்லி:‘வி.எல்.சி.சி., ஹெல்த் கேர்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ வழங்கி உள்ளது.
அழகு மற்றும் ஆரோக்கியம் ஆகிய பிரிவில் இயங்கும் மிகப் பெரிய உள்நாட்டு நிறுவனங்களில், வி.எல்.சி.சி., ஹெல்த் கேர் நிறுவனமும் ஒன்றாகும்.செபியிடமிருந்து அனுமதியை தற்போது பெற்றிருக்கும் நிலையில், இந்நிறுவனம், டிசம்பர் மாத இறுதியில் பங்கு வெளியீட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு வெளியீட்டின்போது, 300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 89.22 லட்சம் பங்குகளையும், இந்நிறுவனம் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, வி.எல்.சி.சி., வெல்னஸ் கிளினிக், வி.எல்.சி.சி., இன்ஸ்டிடியூட் ஆகியவற்றை அமைக்க பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும், பிராண்டு மேம்பாட்டுக்கும் பயன்படுத்த திட்டமிடப் பட்டு உள்ளது. இந்நிறுவனம் 143 நகரங்களில், 310 இடங்களிலும்; 12 நாடுகளிலும் இயங்கி வருகிறது.ஏற்கனவே, கடந்த 2015ம் ஆண்டில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை பெற்ற போதும், அப்போது வராமல் விட்டுவிட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|