பதிவு செய்த நாள்
30 நவ2021
10:07
மும்பை : அனில் அம்பானியின் தலைமையிலான, ‘ரிலையன்ஸ்’ குழுமத்தைச் சேர்ந்த, ‘ரிலையன்ஸ் கேப்பிட்டல்’ நிறுவனத்தின் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு, புதிய நிர்வாகியையும் நியமித்து, அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது ரிசர்வ் வங்கி.
வாங்கிய கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்த தவறியதன் காரணமாக, நிர்வாக குழுவை ரிசர்வ் வங்கி கலைத்துள்ளது.ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், பணத்தை திரும்ப செலுத்த வேண்டியவர்களுக்கு உரிய சமயத்தில் வழங்கவில்லை.மேலும், பணம் செலுத்துவது சம்பந்தமாக, நிர்வாக குழுவால் திறம்பட செயல்பட்டு அப்பொறுப்புகளை நிறைவேற்ற இயலவில்லை.இவற்றை கணக்கில் கொண்டு, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிர்வாக குழு கலைக்கப்பட்டு, மாற்றியமைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘பேங்க் ஆப் மஹாராஷ்டிரா’வின் முன்னாள் நிர்வாக இயக்குனர் நாகேஸ்வர் ராவ், இந்நிறுவனத்துக்கான நிர்வாகியாக நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.அத்துடன், விரைவில் திவால் சட்டத்தின் கீழ், நிறுவனத்தின் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், எச்.டி.எப்.சி., மற்றும் ஆக்சிஸ் பேங்கில் வாங்கிய 624 கோடி ரூபாய் கடனுக்கான வட்டியை கடந்த ஆண்டு செலுத்த தவறிவிட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|