பதிவு செய்த நாள்
30 நவ2021
10:16
புதுடில்லி : ‘ரிலையன்ஸ் ஜியோ’ அதன் கட்டணங்களை அதிகரித்து அறிவித்ததை அடுத்து, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவன பங்குகள் விலை, நேற்று சந்தையில் 1.26 சதவீதம் உயர்ந்தது.
‘பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா’ ஆகிய நிறுவனங்கள், டிசம்பரிலிருந்து கட்டணத்தை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோவும் நாளையிலிருந்து அதன் சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.ரிலையன்ஸ் ஜியோ, அதன் ‘பிரீபெய்டு’ இணைப்பு சேவைகளுக்கான கட்டணத்தை, 20 சதவீதம் அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இது கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 2௦ – 25 சதவீதம் அளவுக்கு பிரீபெய்டு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ கட்டணத்தை உயர்த்த இருப்பதாக அறிவித்ததை அடுத்து, பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரித்தது.இந்நிறுவன பங்குகள் விலை, நேற்று மும்பை பங்குச் சந்தையின் வர்த்தக இறுதியில் 1.26 சதவீதம் அதிகரித்து, 2442.50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|